Skip to content
Home » ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி சமையல் மாஸ்டர் பலி…

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி சமையல் மாஸ்டர் பலி…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நாகமங்கலம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் ( 39) இவர் சமையல் கலைஞராக உள்ளார். இந்நிலையில் விக்கிரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டு விட்டு, அங்கிருந்து சண்முகவேல் சாலையை கடக்க முற்பட்டபோது, முத்துவாஞ்சேரியிலிருந்து அரியலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக

சண்முகவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!