Skip to content
Home » ஸ்ரீரங்கம், திருவானைக்காவலில் ….. சாமி தரிசனம் செய்த ஜார்கண்ட் கவர்னா் சிபிஆர்

ஸ்ரீரங்கம், திருவானைக்காவலில் ….. சாமி தரிசனம் செய்த ஜார்கண்ட் கவர்னா் சிபிஆர்

ஜார்கண்ட் மாநில ஆளுநரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுனருமான சிபி ராதாகிருஷ்ணன்  இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

மதுரையில் இருந்து நேற்று திருச்சி வந்தடைந்த சி.பி ராதாகிருஷ்ணன் திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கிஇருந்தார். இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குவந்தார்.

அவரை  கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் ஊழியர்கள் வரவேற்று  பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கினர்.

ஸ்ரீரங்கம் கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார் . தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்த அவர் தொடர்ந்து தயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி சென்று சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து திருச்சி திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் சென்று அங்கும் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

கவர்னர் வருகையையொட்டி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதிகளில்   பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் கவர்னர் திருவாரூர் புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!