அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அவரது மகன் ஹன்டர் பைடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலம் முடிந்த பிறகு கடந்த மே மாதத்தில் தனக்கு தீவிரமான புற்றுநோய் பாதிப்பு இருப்பதை ஜோ பைடன் பகிரங்கமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அதிபராக இருந்தபோதே சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது நோயின் தீவிரத்தன்மையை காண்பது குடும்பத்தினருக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாக ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார்.
