Skip to content
Home » திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி…… நாளை நடக்கிறது

திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி…… நாளை நடக்கிறது

  • by Senthil

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள்  மற்றும், 2024- தேசிய அனைத்து மாவட்ட விளையாட்டு போட்டிக்கான தகுதிசுற்று  போட்டிகள் திருச்சி  அண்ணா விளையாட்டரங்கில் நாளை  நடக்கிறது.  10 12, 14, 16 வயதுக்கு உட்பட்ட  மாணவ , மாணவிகள் இதில் கலந்து கொள்ளலாம். திருச்சி மாவட்ட தடகள சங்கம் கடலோனியம்/S.தர்ஷன் டிரஸ்ட் அமைப்புடன் இணைந்து போட்டி .

வருகிற 17.01. 24 புதன்கிழமை அன்று திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் இளையோருக்கான (10,12,14 &16 வயதுக்குற்பட்ட மாணவ, மாணவியருக்கு) திருச்சி மாவட்ட தடகள சங்கம் கடலோனியம்/S.தர்ஷன் டிரஸ்ட் அமைப்புடன் இணைந்து போட்டி .

போட்டியில் பங்கேற்போருக்கு  நுழைவு கட்டணமாக  ரூ.100 வசூலிக்கப்படும்.  போட்டியில் பங்கேற்போர் விண்ணப்ப படிவங்களை இன்று  மாலை 6  மணிக்குள் அண்ணா விளையாட்டு அரங்கில் பெற்றுக் கொள்ளலாம்.  முதலிடம் பெறும் குழுக்களுக்கு   சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும்.

சிறந்த போட்டியாளர்கள்  அடுத்த மாதம் குஜராத்தில் நடைபெறும்  போட்டிக்கு  தேர்வு செய்யப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!