Skip to content
Home » தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி…. கனிமொழி எம்.பி. விருப்பமனு

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி…. கனிமொழி எம்.பி. விருப்பமனு

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலில்  போட்டியிட விரும்பும்  திமுகவினர்  கடந்த 1ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில்  விருப்ப மனு அளித்து வருகிறார்கள்.  7ம் தேதி  மாலை வரை மனு அளிக்கலாம். அதன்படி தூத்துக்குடி தொகுதி  எம்.பியும்,  திமுக துணைப்பொதுச்செயலாளருமான  கனிமொழி எம்.பி. மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று  காலை  கனிமொழி எம்.பி. அண்ணா அறிவாலயத்தில்  விருப்பமனு அளித்தார்.

அப்போது அவருடன்  அமைச்சர்கள்  கீதா ஜீவன்,  அனிதா ரைாதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. சண்முகய்யா, தூத்துக்குடி மேயர்  ஜெகன் பெரியசாமி  மற்றும் தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் திரளாக வந்திருந்தனர். விருப்பமனு அளித்த கனிமொழி முன்னதாக மெரினா கடற்கரைக்கு சென்று  அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!