Skip to content

கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி கோமதி (52). இவர் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் அப்பகுதியில் கஞ்சா விற்ற பெண்மணைியை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அப்பெண் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உடையவர் என்பதாலும், இவர் மீது கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் இவரை குண்டாசில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கோமதியை குண்டாசில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மா. பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!