கரூர் மாவட்டம், புலியூரை அடுத்த ஆண்டிப்பாளையம் அருகே முட்புதர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அதே கிராமத்தை சார்ந்த பிரகதீஸ் என்ற 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்துள்ளான். அவர்களை பிடித்து அப்பகுதி பொதுமக்கள் விசாரித்த போது, அவர்கள் கையில் கஞ்சா
இருந்துள்ளது. கஞ்சாவை அவர்கள் புகைப்பதுடன், மற்றவர்களுக்கு விற்பனை செய்தது வந்ததாக கூறப்படுகிறது.
அவர்களை பிடித்து வைத்ததுடன், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த மாயனூர் காவல் நிலைய போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பிடிபட்ட மாணவர்கள் 3 பேரும் புலியூரில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பை பாதியில் முடித்து விட்டு பல்வேறு வேலைகளுக்கு சென்று வந்ததது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.