திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் 90 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையில் நேற்று (11-01-24) நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 89.60அடியாக இருந்த வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதியும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் அதிகப்படியாக
வரும் உபரி நீரை அமராவதி ஆற்றில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர்.
இந்த தண்ணீர் கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு 6,190 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. கரூர் மாநகரப் பகுதியாக வழியாக செல்லும் அமராவதி ஆறு தொடர்ந்து விவசாய பாசனத்திற்கு பயன்படும் வகையில் வந்து கொண்டுள்ளது. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இருகரையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது.