கரூர் துயரச் சம்பவம்: தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்தில் மூன்று பெண் உட்பட 8 காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர்.
அதை தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி சிபிஐ மாற்றப்பட்டு கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தற்காலிகமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து கடந்த வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தடவியல் துறை அதிகாரிகளும் வேலுச்சாமிபுரம் பகுதியில் சாலையை டிஜிட்டல் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் பயன்படுத்திய பேருந்தை வரவழைத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தடவியல் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரம் பேருந்து ஆய்வு செய்து பேருந்து ஓட்டுனிடம் பல்வேறு விளக்கங்களை கேட்டு அறிந்து அதனை பதிவு செய்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று கரூர் தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்தில் நேற்று 8 காவலர்கள் தற்போது விசாரணைக்காக ஆஜராகி இருந்தனர்.
நேற்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் நேரில் ஆஜராகி கரூர் சம்பவம் குறித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கரூர் சிபிஐ அலுவலகத்தில் மூன்று பெண் காவலர் உட்பட 8 காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
வழக்கு மிகவும் தீவிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

