Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூர், தாந்தோணிமலை மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஊதிய பிரச்சனை, குப்பை எடை அளவு அதிகரிப்பு, விடுமுறை கால ஊதிய பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி பணிக்கு செல்ல மறுத்து வாகனங்களை நிறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளர்கள் ஓட்டுநர்கள் பணிக்கமறுத்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். கரூர் மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த

அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் மேற்பார்வையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கரூர் மாநகராட்சி பணியாளர்களுக்கு மேற்கண்ட பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வருவதாகவும், இந்த பிரச்சனைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் மேலும் கரூர் ஆசாத் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை 10.00 மணி அளவில் மிகப்பெரிய அளவில் தமிழகம் தழுவிய போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!