மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன் (38). கடந்த 2012-ம் ஆண்டு தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை அருகே நடந்த மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டதில் 7பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் ராமர் பாண்டி, உள்ளிட்ட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அரவக்குறிச்சி போலீஸார், கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ராமர்பாண்டி சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்தியேன், திருச்சி சரக டிஐஜி மனோகர், எஸ்.பி. பிரபாகர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக் மற்றும் ராமர் பாண்டியின் சடலத்தையும் பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராமர் பாண்டியின் குடும்பத்தினர், உறவினர்கள், அவரது சமூகத்தினர் குவிந்தனர். இதனால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அவரது அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் வசிக்கும் திருமாநிலையூர், திருகாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையடுத்து கரூர் டிஎஸ்பி சரவணன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படாததால் எஸ்.பி. பிரபாகர் பின்னர் ராமர்பாண்டி மனைவி, பெற்றோர், உறவினர்கள், அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு கோட்டாட்சியர் முகமது பைசல் பேச்சுவார்த்தை நடத்தி்னார். இதிலும் உடன்பாடு ஏற்படாததால் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை. இதனால் மருத்துவமனை வளாகத்தில் 2ம் நாளாக சுமார் 300க்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.