கரூர் மாநகர் பகுதியில் உள்ள எல்ஜி பி நகரில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சிநேயருக்கு ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய் ,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள் , சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு
பட்டாடை உடுத்தி, துளசி மாலை மற்றும் வெண்ணெய் காப்பு சாற்றி உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய சிவாச்சாரியார் அதைத் தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி அமாவாசை ஆஞ்சநேயர் சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.