Skip to content
Home » கரூரில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமிதரிசனம்…

கரூரில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமிதரிசனம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை முன்னிட்டு ஆலயம் அருகே யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு சிவாச்சாரியார் உதிரிப்பூக்கள் நாம வழிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு மேல தாளங்கள் முழங்க கலசத்தினை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்தனர் கலசத்தை

வந்தடைந்தது. பின்னர் கலசத்திற்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா விமர்சையாக நடைபெற்றது.

பின்னர் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!