Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே முட்புதர்காட்டில் திடீர் தீ விபத்து ….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புறவழிச் சாலையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லக்கூடிய முக்கிய தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டாங்கோவில் பிரிவு சாலை அருகே தனியார் ஆட்டோ கேஸ் பங்க் பின்புறம் அமைந்துள்ள 1 ஏக்கர் அளவிலான முட்புதற்காட்டில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

கோடை காலம் என்பதால் முட்புதற்காட்டில் இருந்த செடிகள் காய்ந்து கருகி நிற்பதால் செடிகள் மீது வைக்கப்பட்ட தீ மனவளவென பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலை அருகே பல அடி தூரத்திற்கு வானம்

புகைமண்டலமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் ஆட்டோ கேஸ் பங்க், லாரி குடோன், ஜவுளி ஏற்றுமதி நிறுவன குடோன் ஆகியவை அமைந்துள்ளதால் அப்பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டு விடும் என்ற அபாயத்தால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பிளாஸ்டிக் வாளிகளில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினர்.

தொடர்ந்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு பற்றி எரிந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!