Skip to content
Home » கரூர் அருகே சூறைகாற்றுடன் திடீர் மழை… கொட்டகை விழுந்து ஆடுகள் பலி..

கரூர் அருகே சூறைகாற்றுடன் திடீர் மழை… கொட்டகை விழுந்து ஆடுகள் பலி..

கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, தென்னிலை  அடுத்த கூனம்பட்டி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் (38) விவசாயியான இவர், வீட்டின் அருகே கொட்டகை போட்டு அதன் மேல் தகர ஷீட் போட்டு அதில்  42ஆடுகள்  வளர்த்து வந்தார். கடந்த ஒரு வார காலமாகவே கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மாலை காற்றுடன்

கூடிய மழை  பலத்த மழை பெய்தது. இதில்  ஆட்டுக்கொட்டகை திடீரென்று  சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 4 ஆடுகள் இறந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!