Skip to content
Home » கரூரில்TNROA சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

கரூரில்TNROA சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

  • by Senthil

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் வைர பெருமாள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வருவாய்துறை அலுவலர்கள் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் செந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் தனி வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணை உடனே வெளியிட வேண்டும்,இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருக்கும் அரசாணை உடனே வெளியிட

வேண்டும்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!