Skip to content
Home » பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்…. கோவையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்…. கோவையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

  • by Senthil

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுக சொத்து பாதுகாப்பு குழு தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் மாவட்ட நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் செயற்குழு பொதுக்குழு

உறுப்பினர்கள் மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிலை குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கிளைச் செயலாளர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!