Skip to content
Home » பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

கோவை, பொள்ளாச்சி ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோவை தேனி திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சாரல்

மழை பெய்தது. தொடர்ந்து தற்போது சுமார் ஒரு மணி நேரமாக கன மழை பெய்து வருகிறது. பகல் பொழுது கருமேகங்கள் சூழ்ந்து இரவு போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுவட்டார விவசாயிகள் தொடர் மழை பெய்தால் ஆழியார் அணை நிரம்பும் எனவும் தற்போது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!