Skip to content
Home » திருச்சி அருகே கிருஷ்ணா பழமுதிர்சோலை கடையில் மர்ம நபர் கைவரிசை…. சிசிடிவி

திருச்சி அருகே கிருஷ்ணா பழமுதிர்சோலை கடையில் மர்ம நபர் கைவரிசை…. சிசிடிவி

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பழமுதிர்ச்சோலை கடை நடத்தி வருபவர்
ரெங்கராஜ் வழக்கம் போல் கடை வியாபாரம் முடித்துவிட்டு நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் கடையை திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து துறையூர் காவல் நிலையத்தில் ரங்கராஜ்

புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் காவல்துறையினர் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கல்லாவில் இருந்த ரொக்கம் ரூபாய் 10 ஆயிரத்தை மரும நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது சம்பவ குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!