Skip to content

குளித்தலை அருகே எல்கை பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்-குதிரைகள்..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மலையாண்டிப்பட்டியில்லயன்கிங் பிரதர்ஸ் இளைஞர் அணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தை மாத பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு 29ம் ஆண்டு மாபெரும் எல்கை பந்தைய போட்டி நடைபெற்றது.

இதில் மாடுகளுக்கான சிறிய மாடு, ஒத்தை மாடு, இரட்டை மாடு, குதிரைகளுக்காக புதிய குதிரை, பெரிய குதிரை, சைக்கிள் ரேஸ், 1500 மீ ட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இந்த எல்கை பந்தயப் போட்டியில் தஞ்சாவூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த  காளைகள் மற்றும் குதிரைகள் எல்லைக்கோட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன.

ஒத்த மாட்டிற்கு 6 மைல், இரட்டை மாட்டிற்கு 8 மைல் தொலைவும், சிறிய குதிரைக்கு 8 மைல் தொலைவும், பெரிய குதிரைக்கு 10 மைல் தொலைவும் தூரம் நிர்ணயிக்கப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற குதிரை மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!