Skip to content
Home » போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் நேற்று  மாணவர்கள் சிலர்  வகுப்புகளை புறக்கணித்து, திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக 17 மாணவர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி  முதல்வர் ஆ.மாதவி வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த கல்லூரியில் நேற்று முன் தினம் (16-ம்தேதி) நடந்த வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தைப் பற்றி நிர்வாகத்திற்கு தெரிவிக்காமலும், கல்லூரியின் சுமூகமான சூழலுக்குத் தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையிலும் நடந்து கொண்ட கே.கார்த்திக் உள்பட 17 மாணவர்களை வரும் 29-ம் தேதி வரை 10 நாட்களுக்கு கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்வது எனக் கல்லூரி ஆட்சி மன்றக் குழுக்கூட்டத்தின் தீர்மானத்தின் படி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!