கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஐயப்பா ஆலயத்தில் பசுபதிசுவரர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 36-ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆலயத்தில் கொடியேற்றம் தொடங்கி கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம் நடைபெற்றது தொடர்ந்து,கரூர் அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு ஐயப்பா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ நவசக்தி யாகம், ஸ்ரீ சத்திய நாராயணா பூஜை , ஏகதின லட்சார்ச்சனை விழா என்ன சிறப்பு வைபவம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், இன்று உலக நன்மை வேண்டி 500க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர்,இதில் இந்த ஆண்டு உலக அமைதி விரும்ப வேண்டி, கொரோனாவில் இருந்து பொதுமக்கள் விடுபட, நாடு வளமுடன் இருக்க என சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் கடைசி தினமான 31-ம் நாள் சீதா கல்யாண உற்சவம், ஐயப்பன் உற்சவம் என சிறப்பு வைபவம் நடைபெற்ற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.