புதுக்கோட்டை யில் நீதிமன்றம் வளாகத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். வழக்கறிஞர் சங்க தலைவர் முத்தையன் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும், சேமநல நிதியை உயர்த்த வலியுறுத்தியும், இ. பைலிங் முறையினை ரத்து செய்யவும் வலிறுதி கோஷங்களை எழுப்பினர். மூத்த வழக்கறிஞர் கே கே. செல்ல பாண்டியன், சிற்றரசு, ஆதிமூலம், ராமநாதன், பழனிவேல், அருள்மொழிவேந்தன், சிவா, ராஜபாண்டி, சுஜாதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

