Skip to content
Home » லியோ படத்திற்கு 6 காட்சி அனுமதி……வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

லியோ படத்திற்கு 6 காட்சி அனுமதி……வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

நடிகர் விஜய் நடித்து 19ம் தேதி   திரைக்கு வர உள்ள படம்  லியோ. இந்த படத்திற்கு   ஏற்கனவே 5 நாட்கள்,  சிறப்பு காட்சிகள் நடத்த  அரசு அனுமதி அளித்து  உள்ளது. அதாவது காலை 9 மணி முதல்,  மறுநாள் அதிகாலை 1.30 மணிக்குள் இந்த காட்சிகளை  திரையிட்டு முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.  இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கு  5 நாட்களுக்கு 6 காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என   செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  லலித்  சென்னை  ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு இன்று  நீதிபதி அனிதா சுமந்த்  முன் விசாரணைக்கு வந்தது.

19ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம். ஆனால் 5 காட்சிகளுக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டது
ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்றால் 18.45 மணி நேரம் தான் ஆகிறது. எனவே 6 காட்சிகள் திரையிடலாம்
என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தை  எடுத்து வைத்தார்.

அரசு தரப்பில்  அரசு தலைமை வழக்கறிஞர்  சண்முகசுந்தரம் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன
.ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டடுள்ளது’ என்றார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த்,  வழக்கை  நாளைக்கு ஒத்திவைத்தார். நாளை முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!