நடிகர் விஜய் நடித்த லியோ படம் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு 6 நாட்களுக்கு 5 காட்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்தது. மேலும் ஒரு காட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் தயாரிப்பாளர் மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்து 6வது காட்சிக்கு அனுமதி கிடையாது என்றார். அப்படியானால் 9 மணி காட்சியை காலை 7 மணிக்கு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக தமிழக அரசை அணுகுங்கள். அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க முடியாது என்றும்,காலை 7 மணிக்கு திரையிட அனுமதி கேட்கும் கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில், லியோ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை. அரசாணையின்படி நாளை முதல் 24-ம் தேதி வரை லியோ படத்துக்கு காலை 9 மணி காட்சிகளுக்கே அனுமதி என உள்துறை செயலாளர் அமுதா கூறி உள்ளார்.