விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி, அவரது இணையற்ற வீரத்துக்கு வணக்கம் செலுத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய ஒண்டிவீரனின் வீரமும் தியாகமும் தமிழர்களின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்” என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றுவது நமது கடமை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
