Skip to content
Home » நுரையீரல் தொற்று……நேபாள ஜனாதிபதிக்கு டில்லி எய்ம்சில் சிகிச்சை

நுரையீரல் தொற்று……நேபாள ஜனாதிபதிக்கு டில்லி எய்ம்சில் சிகிச்சை

  • by Senthil

நேபாள நாட்டு ஜனாதிபதியாக இருப்பவர்  ராம்சந்திரா பவுடெல். அவருக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மகராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக பயிற்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு பிராணவாயு குறைந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து உயர்சிகிச்சைக்காக அவரை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதன்படி, அவர் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று சேர்க்கப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!