சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் அதிமுகவில் இருந்து விடைபெறுகிறேன் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவால் ஒட்டுமொத்த இயக்கமும் அழிவில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
