கேரள: ஒரு தேசத்தின் வருங்காலத் தலைமுறை குரல் கொடுக்கும்போது, அவர்களின் குரல்கள்அடக்குமுறை சக்தியால் நசுக்கப்படும் போது, அந்த எதிர்காலமே நசுக்கப்படுகிறது. நம் நாட்டில் நியாயமான காரணத்திற்காக அமைதியான முறையில் போராடும் ஒவ்வொருவருக்கும், எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். நீட் முறைகேட்டை கண்டித்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு திரைத்துறையில் இருந்து பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் சென்று இளைஞர்களுக்கு தனது ஆதரவை வழங்கினார். இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார், அதிதி ராவ், டொவினோ தாமஸ், சோனு சூட் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இளைஞர்களின் போராட்டத்துக்கு துணை நிற்பதாக SM-களில் பதிவிட்டுள்ளனர்.
