தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே சாலையில் ஏராளமான ஆதரவற்றோர் தங்கி யாசகம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இராமையா என்பவர் தான் வளர்த்து வரும் நாயை அருகில் படுத்திருந்த வேல்முருகன் என்பவர் கல்லால் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இராமையா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேல்முருகனை குத்தி கொலை செய்துள்ளார்.
மேற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இராமையாவை கைது செய்துள்ளனர். இராமையா – வேல்முருகன் இருவரும் பெரிய கோயிலில் தங்கி யாசகம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
