Skip to content
Home » மணிப்பூர் நிலவரம் மோசமாகி வருகிறது.. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தகவல்…

மணிப்பூர் நிலவரம் மோசமாகி வருகிறது.. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தகவல்…

மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மணிப்பூர் வன்முறையில் இரு சமூகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. அந்த வகையில் கடந்த மே 4ம் தேதி ஆண்கள் கும்பலால் குகி சமூகத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கள நிலவரம் குறித்து ஆராய 2 நாள் பயணமாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேற்று மணிப்பூர் சென்றது. இந்த குழுவில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் (காங்கிரஸ்), சுஷ்மிதா தேவ் (திரிணாமுல் காங்கிரஸ்), கனிமொழி (திமுக), மனோஜ் குமார் ஜா (ராஷ்ட்ரீய ஜனதாதளம்), சந்தோஷ் குமார் (இந்திய கம்யூனிஸ்டு), ரகிம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி’ (இந்தியா கூட்டணி) எம்.பி.க்கள் 21 பேர் இடம்பெற்றிருந்தனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், வன்முறை நடைபெற்ற பகுதிகளையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில், மணிப்பூர் கவர்னர் அனுசியாவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு இன்று சந்தித்தது. இந்த சந்திப்பின்போது மணிப்பூரில் நிலமை மோசமாக உள்ளது. அமைதியை கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்கும்படி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவர்னரிடம் வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!