Skip to content
Home » திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ….. தலா ரூ.1 கோடி தரவேண்டும்…… மன்சூர் திடீர் வழக்கு

திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ….. தலா ரூ.1 கோடி தரவேண்டும்…… மன்சூர் திடீர் வழக்கு

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து  அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிககைள்  திரிஷா, குஷ்பு,  நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.  இந்த நிலையில்  மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக் கு  தொடர்பாக  நடிகர் மன்சூரை அழைத்து போலீசாா் விசாரணை நடத்தினர். பின்னர் நடிகர் மன்சூர் திரிஷாவிடம் மன்னிப்பும் கேட்டார்.

அத்துடன் இந்த பிரச்னை முடிந்தது என அனைவரும் கருதினர்.  ஆனால் திடீரென மன்சூர் அலிகான், நான் மன்னிப்பு கேட்கவில்லை  என கூறியதுடன்,  திரிஷா, குஷ்பு, மன்சூரலிகான் ஆகிய  மூவர் மீதும்  சென்னை ஐகோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தலா ரூ.1 கோடி தர உத்தரவிடக்கோரி மன்சூர் அலிகான் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ளார். மன்சூர்அலிகான் தாக்கல் செய்த  இந்த வழக்கு  நாளை மறுதினம் திங்கட்கிழமை  நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வரவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!