பிரான்ஸ் நாட்டின் லேண்டஸ் மாகாணத்தில் உள்ள பைன் காடுகளில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ 2,700 ஏக்கர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. தீ லக்லான் கிராமத்தை மிக அருகில் நெருங்கியதால் 525 கிராம மக்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 6 தீயணைப்பு விமானங்களின் உதவியுடன் இந்த பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகின்றனர்.
