Skip to content
Home » தமிழ்நாடு நாள்… மயிலாடுதுறையில் பள்ளி மாணவ-மாணவிகள் பேரணி….

தமிழ்நாடு நாள்… மயிலாடுதுறையில் பள்ளி மாணவ-மாணவிகள் பேரணி….

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா 18.07.1967-இல் பெயர் சூட்டினார். இன்று தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாளாள் தினத்தை கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவை கொண்டாடும் வகையில் மாணவ மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில், மாணவர்கள் தமிழ் மொழியை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டனர். இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!