Skip to content
Home » மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறையை அடுத்துள்ள  சித்தர்காடு காவிரிவடகரை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஜூர் ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமையான இக்கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவிலில் திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டு, கடந்த 13 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசால பூஜை இரண்டாம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் இன்று நான்காம் கால யாகசாலை நிறைவுற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலைமையில் சுமந்து மேள தாளம் மற்றும் செண்டை மேளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து கோவிலின் விமான கும்பத்தை அடைந்து கோபுர கலசத்தின் மீது ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் மடாதிபதி 27ஆவது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!