Skip to content
Home » எம்ஜிஆர் பிறந்தநாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு..

எம்ஜிஆர் பிறந்தநாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு..

  • by Senthil

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்  அறிக்கை விடுத்துள்ளார்.  அவர் கூறியதாவது….  கழக நிறுவனத்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107-ம் ஆண்டு
பிறந்த தினத்தை முன்னிட்டு 17.01.2024 புதன்கிழமை காலை 9.00 மணியளவில், திருச்சி புறநகர்
தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி BHEL வளாகத்தின்
வாயிலில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
வழங்கப்படவுள்ளது. அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை,
வட்ட, MGR மன்றம், அம்மா பேரவை, MGR இளைஞர் அணி, மகளீர் அணி, மாணவர் அணி,
அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர்
அணி, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர்
மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி, கலைப்பிரிவு
நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கணைகள் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன். மேலும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலை மற்றும் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளித்து
கொண்டாடிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!