இன்று (04.12.2023) நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள் கண்காணிப்பு மற்றும் களப்பணி நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாண்புமிகு மேயர் ஆர். பிரியா, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச்
செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா,
கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத் , இணை ஆணையாளர் பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.