Skip to content
Home » மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (11.12.2023) தலைமைச் செயலகத்தில்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  வைகோ
சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற  நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் மற்றும் கட்சி நிதியும் சேர்த்து மொத்தம் 10 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக செயலாளர்  துரை வையாபுரி, சட்டமன்ற உறுப்பினர்கள்  எம். பூமிநாதன்,  கே. சின்னப்பா,  டி. சதன் திருமலைகுமார்,  ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!