Skip to content

வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் , திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியா பாரிகள் சங்கம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா
திருச்சி – தஞ்சை சாலையில் அமைந்துள்ள தனரெத்தினம் மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் தலைவர் யு.எஸ்.கருப்பையா தலைமை தாங்கினார்.வியாபாரிகள் ஒற்றுமை சங்கம்செயலாளருமான,
எம்.கே.எம் காதர் மைதீன் வரவேற்றார்.
விழாவில் கல்வி ஊக்கத்தொகையாக 60 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கி
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.
விழாவில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு,
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் , திருச்சி
மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில்
மார்க்கெட் பகுதி திமுக செயலாளர் ஆர் ஜி பாபு,
ஒற்றுமை சங்கத்தின் பொருளாளர் ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம்,சங்க ஆலோசகர்கள் பி.கே.எஸ் அப்துல் மலிக் கே.டி.தங்கராஜ்,
மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், கமிட்டி உறுப்பினர்கள்,சங்க அலுவலர் கே.நாராயணன் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்துகொண்டனர் .
விழாவை பொருளாளர் ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைத்தார்.
விழாவில் மாணவ, மாணவிகளை வாழ்த்தி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

திருச்சி காந்தி மார்க்கெட் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் அதிக மதிப்பெண் பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ பத்தாயிரம் கல்வி உதவித்தொகை வழங்க முன் வந்து, பத்து லட்சம் வரை செலவு செய்துள்ளார். அவரும் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து கடும் உழைப்பால் முன்னுக்கு வந்தவர் .பணம் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். கொடுக்க மனம் வேண்டும்.
அந்த மனம் படைத்தவர் எம்.கே .எம்.காதர் மைதீன். அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.
மற்ற துறைக்கும் கல்வி துறைக்கும் உள்ள வேறுபாடு என்று பார்த்தால் எங்களுடைய துறைக்கு ஒரு அரசாங்கம் வெறும் முதலீட்டை மட்டும் தான் செய்து கொண்டிருக்கும். மற்ற துறைக்கு முதலீடு செய்தால் அந்தத் துறையில் அந்த முதலீட்டை எடுத்து விட முடியும் .ஆனால் அது மன அமைதியால் முடியாது. படிப்புக்கு தடையாக எது வந்தாலும் அதை நான் பார்த்துக்கொள்கிறேன். மாணவச் செல்வங்களாகிய நீங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று கூறும் முதல்வரை தான் நாம் பெற்று இருக்கிறோம். இந்த காந்தி மார்க்கெட் வியாபார சங்கத்திற்கு இதுபோல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அவர்களை வாழ்த்துகிறேன்.
எம் கே எம். காதர் மைதீன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த கல்வி ஊக்கத்தொகை வருடந்தோரும் வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

 

 

error: Content is protected !!