வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் நியூ ஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து நடத்திய 39-வது தமிழ் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றார். இந்த விழாவில், ‘வான்புகழ் வள்ளுவம்’ என்ற ஆவணப் படத்தை அமைச்சர் வெளியிட்டார். மேலும், ஹூஸ்டன் நகரில் அமைச்சர் ராஜ்மோகனை ஹூஸ்டனுக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் இந்திய துணைத் தூதர் டி.சி.மஞ்சுநாத் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
