Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் செந்தில் பாலாஜி 15ம் தேதி….. கரூரில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்

மின்சாரம் மற்றும்  மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 15ம் தேதி (ஞாயிறு) கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்து   கோரிக்கை மனுக்கள் பெற்று உரையாற்றுகிறார். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதல்வர்  தளபதி  ஆணைக்கிணங்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  வழிகாட்டுதலுடன்  நடைபெறும் இந்த  மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில்  பொதுமக்கள் அனைவரும்  கலந்து கொண்டு  கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.

15ம் தேதி காலை 8 மணிக்கு 38வது வார்டு  மெடிக்கல் காலேஜ் மாரியம்மன் கோவில் அருகே மனுக்கள் பெறுகிறார்.

8.30 மணி– 19வது வார்டு,  ராமானூர் திடல்,

9 மணி– 18வது வார்டு,  வெற்றி தியேட்டர் அருகில்

9.30 மணி— 17வது வார்டு,  பசுபதிபாளையம் உதயநிதி திடல்,

10மணி—12வது வார்டு,  பசுபதிபாளையம் வடக்குத் தெரு

10.30 மணி– 11வது வார்டு, பாலம்மாள்புரம்

11 மணி– 20வது வார்டு,  வஉசி தெரு வாசுகி மகால்,

11.30 மணி—21வது வார்டு,  மாரியம்மன் கோவில் அருகில்

நண்பகல் 12 மணி—-  35வது வார்டு, கீரைக்காரத் தெரு

12.30 மணி—34வது வார்டு,  மக்கள் பாதை

மதியம் 1 மணி— 33வது வார்டு,  படிக்கட்டுத்துறை

1.30 மணி— 32வது வார்டு,  முத்துராஜபுரம் கோவில் அருகில்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!