மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 24 பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ரூ.33 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
