மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா, சட்டீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு இந்த மாதம் தேர்தல் நடக்கிறது. சட்டீஸ்கரில் மட்டும் நாளையும், வரும் 17ம் தேதியும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. மிசோரத்தில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நாளை 20 தொகுதிகளுக்கு முதல்கட்டத்தேர்தல் நடக்கிறது. அதே போல மிசோரம் சட்டசபைக்கும்(40 தொகுதிகள்) நாளை தேர்தல் நடக்கிறது. 5 மாநில தேர்தல் முடிவுகளும் வரும் டிசம்பர் 3ம் தேதி அறிவிக்கப்படும்.