திருச்சி ரயில் நிலைய நடைமேடை அதிகாலை 12.30 மணியளவில் கன்னியாகுமரி நோக்கி செல்லும் ரயில் பெட்டியில் செல்வபிரியா என்ற பெண் பயணித்துள்ளார். அப்போது ஒருவர் செல்வபிரியாவிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். உடனடியாக அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த ரயில்வே காவல் நிலைய காவலர் சதீஷ்குமார் என்பவர் தப்பி ஓடிய பீகாரை சேர்ந்த நிரஞ்சன் என்பவரை கையும் களவுமாக பிடித்தார். பின்னர் திருச்சி கோர்ட்டில் ஆஜர் செய்து 15 நாட்கள் காவல் அடைப்பு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
