அரிய வகை லார் கிப்பான் குரங்கு விற்பனை விவகாரம் தொடர்பான விசாரணையில், நடிகர் விக்ரமுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வனத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அதேவேளையில், இக்குரங்கிற்கான உரிய ஆவணங்களை வைத்திருந்த போதிலும், அதனை முறையாகப் பதிவு செய்யாமல் இருந்த கேசவநாதன் என்பவர் மீது வனத்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
