Skip to content
Home » கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹொரேயாலா கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ். இவருக்கும், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொனனூரு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி(28) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஜோதி, தனது கணவருடன் ஹொரேயாலா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இவர்களுக்கு பாந்தவ்யா(7), மானசா(3) என 2 மகள்கள் இருந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜோதி மனமுடைந்தார். ல் நேற்று காலையில் யோகேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த ஜோதி, தனது 2 மகள்களையும் தூக்கிலிட்டு கொன்றார். பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ஜோதியின் வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர், ஜோதியும், அவரது குழந்தைகளும் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுபற்றி அவர்கள் பேகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஜோதி மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!