Skip to content

எம்.எஸ். சுவாமிநாதன் 100வது பிறந்தநாள்: நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி

  • by Authour

பாரத ரத்னா எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வன தலைவர் சவுமியா சுவாமி​நாதன்  சென்னையில் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வன​மானது, ஊட்டச்சத்​து, எழை எளிய மக்​கள் மற்​றும் பெண்​கள் முன்​னேற்​றம் ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்டு செயல்​பட்டு வருகிறது.

இந்​தி​யா​வில் உணவு தட்​டுப்​பாட்டை நீக்​கியது மற்​றும் அனை​வருக்​கும் சமமான ஊட்​டச்​சத்து கிடைத்​த​தில் எம்​.எஸ்​.சு​வாமி​நாதனின் பங்கு மிகப்​பெரியது. அவரின் 100-வது பிறந்​த​நாள் ஆக.7-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்​னிட்டு டெல்​லி​யில் ஆக.7 முதல் 9-ம் தேதி வரை ‘நீடித்த பசுமை புரட்சி – இயற்​கை​யுடன் இயைந்த வாழ்க்​கை’ என்ற தலைப்​பில் சர்​வ​தேச மாநாடு நடை​பெறவுள்​ளது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்​கிறார்.

இந்த மாநாட்​டில் பல்​வேறு மாநில அமைச்​சர்​கள், அதி​காரி​கள் பங்​கேற்​கின்​றனர். மிக முக்​கிய​மாக 120 விஞ்​ஞானிகள், 300-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள், 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​கின்​றனர். இந்த நிகழ்ச்​சி​யில் எம்​.எஸ்​. சு​வாமி​நாதனை கவுரவிக்​கும் வித​மாக அவர் உரு​வம் பொறித்த தபால் தலை மற்​றும் நாணயத்தை பிரதமர் மோடி வெளி​யிடு​கிறார். மேலும் உலக அறி​வியல் அமைப்பு சார்​பில் விவ​சா​யம் மற்​றும் அமை​திக்​கான விருது இந்த ஆண்டு முதல் ஆண்​டு​தோறும் வழங்கப்படவுள்ளது. மூன்​றாம் உலக நாடு​களைச் சேர்ந்த விஞ்​ஞானி ஒரு​வருக்கு 25 ஆயிரம் டாலர் பரிசுடன் இந்த விருது வழங்​கப்​படும்.  இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.
error: Content is protected !!