மாசி மகத்தையெட்டி நாகையில் உள்ள 8, சைணவ, வைணவ, திருக்கோவில்களில் இருந்து எழுந்தருளிய சுவாமிகளுக்கு வங்ககடலில் மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நாகையில் அமைந்துள்ள சவுந்தர்ராஜ பெருமாள், வரதராஜ பெருமாள், கஸ்தூரி ரங்கநாத பெருமாள், அனந்த நாராயண பெருமாள், தாமோதர நாராயண பெருமாள் உள்ளிட்ட 8,கோவில்களில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது.. பக்தர்கள் பல்லக்கில் ஊர்வலமாக தூக்கி வந்த 8, சிவன், பெருமாள், ஆகிய சுவாமிகளும் நாகை புதிய கடற்கரையில் ஒரே நேரத்தில் எழுந்தருளினர். பின்னர் நம்பியார்நகர் மீனவர்கள்
சீர் வரிசையாக கொண்டுவந்த பூஜை பொருட்களால் மகா தீபாராதனையும் பூஜைகளும் நடைபெற்றன. அதன் பின்னர் வங்க கடலில் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், சந்தனம் திரவியங்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க 8, கோவில்களில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வங்க கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.