Skip to content
Home » நாகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

நாகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

தமிழகத்தில் பரவலாக புழங்கும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து, நாகையில் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். நாகை நகராட்சி அலுவலகத்தில் இருந்து

துவங்கிய மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுகவினர் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் கைகளை கோர்த்தபடி நின்று, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் புழங்கும் போதை வஸ்துகளை காவல்துறை தடுக்க வேண்டும் என்றும், கஞ்சா போதை பொருட்களால் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு காரணமான முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் போன்ற பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு அதிமுகவினர் கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!