Skip to content
Home » நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

  • by Senthil

 

நாகப்பட்டினம், காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை  சேர்ந்தவர்  நேசமணி. இவர்மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில்  பல  வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும் இவர் பெயர் உள்ளது.   இந்த நிலையில்   நேசமணி, நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் கத்தியை வைத்துக் கொண்டு இருச்சக்கர வாகனத்தில் சென்றவர்களையும், பொது மக்களையும் கத்தியால்

குத்துவதற்கு பாய்ந்து சென்றதால் பொது மக்கள் அச்சமடைந்து நாலாபக்கமும் சிதறி ஓடினர். மேலும் அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்தி ஓட்டுனரை குத்த பாய்ந்து ரகளையில் ஈடுப்பட்டார்

தகவல் அறிந்து வந்த வெளிப்பாளையம் போலீசார்  நேசமணியை மடக்கி பிடிக்க முற்பட்ட போது போலீசாரையும் கத்தியால் குத்த  பாய்ந்தார்.  இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தன்னை பிடித்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்வேன் என்று போலீசாருக்கும்  பயத்தை ஏற்படுத்தி மிரட்டினார்.

திடீரென  தன்னுடைய கழுத்தை  தானே அறுத்துக் கொண்டு ரத்தம் வழிய, வழிய பொது மக்களையும் குத்துவதற்கு பாய்ந்தார் . இதற்கு பயந்து வாகன ஓட்டிகள் வண்டிகளை நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் நேசமணியை  மடக்கி பிடித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை எடுக்க மறுப்பு தெரிவித்து தப்பிக்க முயன்றார்.

துரத்தி பிடிக்க சென்ற போலீசாரை மருத்துவமனை வாசலிலே வைத்து துரத்தி துரத்தி கத்தியால் குத்த பாய்ந்த வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.  சுமார் 1 மணி நேர ரகளைக்கு பிறகு போலீசார் ஒருவழியை நேசமணியை  பிடித்தனர்.இதனால் மருத்துவமனை வளாகமே பரப்பரப்பானது.  அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர்  போலீசார் காவல் நிலையத்திற்கு  கொண்டு சென்றனர்.

நேசமணியின் இந்த ரகளைக்கான காரணம் குறித்து  போலீசார் விசாரித்தபோது,  பல சுவாரஸ்யமான தகவல்கள்  கிடைத்தது.  6 வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவரோடு திருமணம் ஆன நிலையில் கடந்த 2 வருடமாக அதே பெண்ணோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவன் வெளிப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது விசாரணைக்கு வந்த நேசமணி அந்த பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்குமாறு ரகளையில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. நாகையில் முன்னாள் காதலியும் இன்னொருவருக்கு மனைவியான பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்க சொல்லி கத்தியால் பொது மக்கள் மற்றும் போலீசாரையும் குத்த பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!